TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த தகவல்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண்கள் குறித்த தகவல்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண்கள் குறித்த தகவல்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த தகவல்!

TNPSC குரூப் 4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்ணில் குறைந்தது 60 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அறிவித்து உள்ளார். மேலும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி 24.07.2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது

அப்டேட் தகவல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணைய தலைவர் கா. பாலச்சந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அதன்படி, 7,301 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இந்த தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 274 காலிப் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவியில் 3590 + 3 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்) பதவியில் 884 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

தொடர்ந்து வரித் தண்டலர், நிலை-I பதவியில் 50 காலிப் பணியிடங்கள், தட்டச்சர் பதவியில் 2089 + 39 காலிப் பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. தட்டச்சர் பதவிக்கு தேர்தெடுக்கப்படுவருக்கு மாத சம்பளம் ரூ.19,500 – 71,900 வரை வழங்கப்படும். மேலும் சுருக்கெழுக்கு தட்டச்சர் (நிலை-III) பதிவில் 885 +39 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன மற்றும் மாத ரூ.20,600 – 75,900 வரை வழங்கப்படும். பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம் உதகமண்டலம்) பணியில் 1 காலிப் பணியிடம் உள்ளது. மாத சம்பளம் ரூ. 16,500 – 66,000 ஆகும். இந்த வகையில் இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவியில் 64 காலிப்பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) பதவியில் 30+4 காலிப் பணியிடங்கள் மற்றும் மாத சம்பளம் ரூ.19,500 – 71,900 வழங்கப்படும்.

இந்த வகையில் வரி தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவியில் 49 காலிப் பணியிடங்கள் உள்ளன, மாத சம்பளம் ரூ.16,600 – 60,800 ஆகும். தொடர்ந்து சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை -III) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவியில் 07 காலிப் பணியிடங்கள் ,சம்பளம் ரூ. 20.600 – 75,900 ஆகும். குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும். ஆனால், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்வு எழுத 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!