நெல்லையில் மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
மார்ச் 4 ஆம் தேதி அன்று கன்னியாகுமாரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 189 ஆவது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடவுள்ளனர். இதனால் மார்ச் 4 ஆம் தேதி நெல்லையில் உள்ளூர் விடுமுறை நாளாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும். இங்கு வைகுண்டசாமியின் பிறந்த நாளான மாசி 20-ம் தேதி அதாவது மார்ச் 4 அன்று அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டசாமி அவதார தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் 189 வது அவதார தின விழா வருகிற மார்ச் 4-ம் தேதி ( வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி நடைபெறும்.
Post Officeன் சூப்பர் PPF திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
இதனால் அந்த மாவட்டம் முழுவதுமே திருவிழா மாதிரி கலகலப்பாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து ஆதலவிளைக்கு மகாதீப ஊர்வலமும் நடக்க இருக்கிறது. இந்த ஊர்வலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு அந்த மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து சில நாட்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பொது தேர்விற்கு தயாராகி வருகின்றனர். பொது தேர்விற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது போன்ற விடுமுறை அந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை பாதிக்கிறது. அதனால் இந்த உள்ளூர் விடுமுறை பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அலுவலக நிறுவனங்களுக்கும் இத்தகைய விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வங்கிகள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.