புது தொழில் தொடங்க இடம் பார்க்கும் கதிர், முல்லையை கிண்டல் செய்யும் மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது தொழில் தொடங்க இடம் பார்க்கும் கதிர், முல்லையை கிண்டல் செய்யும் மல்லி - இன்றைய
புது தொழில் தொடங்க இடம் பார்க்கும் கதிர், முல்லையை கிண்டல் செய்யும் மல்லி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது தொழில் தொடங்க இடம் பார்க்கும் கதிர், முல்லையை கிண்டல் செய்யும் மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா முதல் நாள் கடைக்கு வருவதை நினைத்து மிகவும் சந்தோசப்படுகிறார். பின் கதிர் புதிதாக தொழில் தொடங்க இடம் பார்க்கிறார். பின் பார்வதி மல்லி கதிர் புது தொழில் பற்றி சொல்ல, முல்லை கடுப்பில் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா முதல் நாள் எப்படி கடைக்கு வருவது என பேசிக் கொண்டிருக்க ஜீவா கண்டிப்பாக கடைக்கு வர வேண்டுமா என கேட்கிறார். மீனா ஆமாம் என சொல்ல வீடு போல இருக்காது அங்கே நிறைய வேலை இருக்கும் என சொல்ல மீனா நான் சிறு வயதில் இருந்து கடையில் வளர்ந்தவள் என சொல்கிறார். பின் ஜீவா ஐஸ்வர்யாவிடம் சண்டை போட்டு தவறான முடிவு எடுத்துவிட்டாய் என சொல்ல மீனா அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் கதிர் தனது நண்பருடன் புது தொழில் தொடங்க இடம் பார்க்க செல்கிறார். அங்கே இடம் பிடித்து போக அட்வான்ஸ் எவ்வளவு என கேட்கிறார் அட்வான்ஸ் 40000 ரூபாய் வாடகை 5000 ரூபாய் என சொல்கிறார். பின் இதற்கு முன்னே எங்கே வேலை செய்தாய் என கேட்க ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்வதாக சொல்கிறார். பின் கதிரின் நண்பர் இவன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி அண்ணனின் தம்பி என சொல்கிறார். நீங்க மூன்று பேறும் சேர்ந்து கடை வைத்தீர்களே என்ன ஆச்சு என ஓனர் கேட்க தனியாக வைக்கலாம் என வந்ததாக சொல்கிறார்.

செப்டம்பர் 3 முதல் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு

மறுபக்கம் அந்த ஓனர் மூர்த்திக்கு போன் செய்கிறார். என்ன கடை பக்கம் ஆளை காணவில்லை என சொல்ல, உடம்பு சரி இல்லை என மூர்த்தி சொல்கிறார் உங்க தம்பி மெஸ் வைக்க போறதாக இடம் பார்க்க வந்தார். கொடுக்கலாமா என கேட்க கொடுங்கள் என சொல்கிறார். அட்வான்ஸ் எவ்வளவு என கேட்க 40000 என சொல்கிறார். பின் உங்களுக்கு தெரிந்து தான் எல்லாம் நடக்கிறதா என கேட்க ஆமாம் என மூர்த்தி சொல்கிறார். பின் அட்வான்ஸ் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என சொல்ல சரி என ஓனர் சொல்கிறார்.

பின் தனம் மீனா கடைக்கு கிளம்பி விட்டாளா என கேட்க மீனா கிளம்பி கொண்டிருக்கிறார். கடைக்கு போவது போல கிளம்பாமல் நிகழ்ச்சிக்கு போவது போல கிளம்புகிறார் மீனா. தண்ணீர், கர்சீப் என எடுத்து கொண்டு போக கண்ணன் ஐஸ்வர்யா கிண்டல் செய்கின்றனர். மீனா அதை எல்லாம் கேட்காமல் கிளம்பி செல்கிறார். பின் முல்லை வீட்டிற்கு அவருடைய அம்மா மற்றும் மல்லி வர முல்லைக்கு பிடிக்காமல் இருக்கிறது. அப்போது முல்லை அப்பாவிடம் அம்மாவால் கதிர் வேலை போய்விட்டது என சொல்கிறார்.

முல்லை அம்மாவை குறை சொல்ல, மல்லி நான் பணம் தருகிறேன் என சொல்கிறேன் ஆனால் நீ கேட்கவில்லை என சொல்கிறார். இவளுடைய தயவு வேண்டாம் என சொல்லி தான் நாங்க இருப்பதாக சொல்கிறார், மல்லி மதுரைக்கு வாங்க என சொல்ல, முல்லை உன் தேவை எங்களுக்கு இல்லை என சொல்கிறார். பின் முல்லையின் அப்பா கதிர் வேலைக்கு என்ன செய்ய போகிறார் என கேட்க, புதிதாக கடை தொடங்க இருப்பதாக முல்லை சொல்கிறார். இது நல்ல விஷயம் என முல்லை அப்பா சொல்கிறார். முல்லை நீங்க எப்படி நடத்துவீங்க என கேட்க மல்லி கிண்டல் செய்கிறார். உடனே முல்லைக்கு கோவம் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!