செப்டம்பர் 3 முதல் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் முடிந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களும் அதீத ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இடையில் பருவமழையின் காரணமாக பள்ளிகளுக்கு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை சிலருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை முதல் பருவ வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
ஓணம் விடுமுறை செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, செப்டம்பர் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் “மலையாள மொழியைப் பாதுகாக்க அரசு பல திட்டங்களைத் தயாரித்துள்ளது. நமது தாய்மொழியை வளர்க்க இதுபோன்ற பல திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.