விஜய் டிவி மாகாபாவிற்கு கையில் திடீர் எலும்பு முறிவு – நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!
விஜய் டிவியில் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக X-Ray போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாகாபா ஆனந்த்:
விஜய் டிவியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். அவர் முன்னதாக ஓரு ரேடியோ சேனலில் பாடகர் ஆதியுடன் பணிபுரிந்து பின் சின்னத்திரைக்கு வந்துள்ளார். கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த அவர் கையில் கட்டுடன் இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஏற்கனவே அவருடன் ஜோடியாக வரும் தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதனால் அவர் தொகுத்து வழங்கி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா தான் தொகுத்து வழங்கி வந்தார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
இந்நிலையில் மாகாபா கையில் அடிபட்ட நிலையிலும் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு வந்திருந்தார். அவருடன் தீனா ஷோவை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மாகாபா அவரது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவர் எக்ஸ்ரே புகைப்படத்தை பகிர்ந்து “Thumps up taste the thunder” என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் கதைக்களம்!
விஜய் டிவி பிரபலங்களும் அவர் விரைவில் நலமுடன் வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். “Get wellll sooon” என டிடி பதிவிட்டு உள்ளார்.”Get well soon anna” என ஹிப் ஹாப் ஆதி பதிவிட்டு உள்ளார். மேலும் பலரும் மாகாபாவுக்கு என்ன ஆனது என நலம் விசாரித்து வருகின்றனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் இரண்டு தொகுப்பாளர்களுக்கும் இப்படி ஆனதால் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களும், ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கின்றனர்.