விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் கதைக்களம்!
விஜய் தொலைக்காட்சி பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது பாக்கியாவின் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதாபாத்திரமாக வரும் நடிகர் சஞ்சய் சங்கர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களும் ஒவ்வொரு வகையில் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை பற்றி கதை அமைந்துள்ளது. அதனால் தான் பெண் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தாலும் வேலைக்கு சென்றால் மட்டுமே மதிப்பு என்பதை கதை உணர்த்துகிறது. இந்த கதையில் பாக்கியாவின் வாடிக்கையாளர் ஒருவர் 1000 பேருக்கு சமைக்க ஆர்டர் ஒன்றை கொடுத்துள்ளார்.
நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து பிரச்சனை – முதன்முறையாக மனம் திறந்த நடிகர்!
ஆனால் அதை உன்னால் செய்ய முடியாது என அனைவரும் கேலி செய்து மட்டம் தட்டி வருகின்றனர். அதையே ஊக்குவிப்பாக எடுத்துக் கொண்டு பாக்கியா, எழில் மற்றும் செல்வியின் உறுதுணையுடன் சமையல் ஆர்டரை செய்ய இருக்கிறார். பாக்கியாவின் சமையல் பிடித்து போய் பாக்கியவை நேரில் அழைத்து பாராட்டி இந்த சமையல் ஆர்டரை கொடுக்கிறார். இந்த தொழிலதிபர் காரணமாக தான் பாக்கியா முதன்முதலில் குடும்பத்தை எதிர்த்து வெற்றி பெற இருக்கிறார். கதைக்கு முக்கியமான அந்த கதாபாத்திரம் யார் என்பது பற்றி பார்க்கலாம். மேலும் அவருடன் பாக்கியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படும் 2 டாப் சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர், பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர். ‘தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்’ என்று பெயர் பெற்ற ஜெய்ஷங்கர், ஏராளமான துப்பறியும் படங்களில் நடித்தவர். அவருடைய மகன், சஞ்சய் சின்னத்திரையில் நடிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, மௌன ராகம் சீரியலில் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை களமிறக்கியது விஜய் டிவி. அவரை தொடர்ந்து இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ஜெய்சங்கரின் மகனையும் நடிக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.