உடல்எடை கூடி குண்டான நடிகை மஞ்சிமா மோகன் – ரசிகரின் கேள்விக்கு அவர் அளித்த பதிலடி!
சமீபத்தில் நடித்துள்ள படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்திருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அதற்கான பதிலை அவர் அளித்துள்ளார்.
விமர்சங்களுக்கு பதில்:
சினிமாக்களில் வரும் நடிகைகள் என்றாலே அவர்கள் மிகவும் ஒல்லியாக மெலிந்த உடலோடு இருக்க வேண்டும் என்பது கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இதனால் பல கதாநாயகிகளும் டயட் என்ற பெயரில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் தான் வலம் வருகின்றனர். இதனால் பலரும் பாலிவுட் வாய்ப்புகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் FIR என்ற படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.
பிறந்தநாளில் லட்சுமியின் அப்பா பற்றிய உண்மையை சொல்லும் கண்ணம்மா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அதில், சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு, விக்ரம் பிரபுவுடன் சத்திரியன், கவுதம் கார்த்திக் உடன் தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் தற்போது நடித்துள்ள FIR படத்தில் சற்று உடல் எடை கூடி உள்ளார்.
திருமணத்திற்கு பின் ஆர்யனுடன் வெளியே சென்ற ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!
இதனால் இவர் பாடி ஷேமிங் விமர்சனங்களுக்கு உள்ளானார். இது குறித்து அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ரசிகை ஒருவர் கேட்ட போது ஒல்லியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஒல்லியாக இருந்தால் ஏன் sick ஆக இருக்கீங்க என கேட்பாங்க. நீங்கள் எப்படி இருந்தாலும் body shaming இருந்துடே இருக்கும். என்று கூறியுள்ளார். மேலும், நடிகை சாய் பல்லவி தன்னை எவ்வளவு தன்னம்பிக்கையாக காட்டிக் கொள்கிறார் என்றும் கூறியுள்ளார்.