திருமணத்திற்கு பின் ஆர்யனுடன் வெளியே சென்ற ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!
காதல் திருமணம் செய்து கொண்டு சமீப நாட்களாக அதிக சர்ச்சையில் சிக்கி வந்த செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
பிரபலங்கள் காதல் முதல் விவாகரத்து வரை அவர்களின் அனைத்து செயல்களும் மீடியா உலகம் உற்று நோக்கி வரும் நிலையில், அவை எதை பற்றியும் தங்கள் நினைவில் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை எண்ணம் போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஜோடி தான் செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன். இவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செய்தி ஊடகங்கள் தனி காரணத்தை கிளப்பி செய்தியாக்கி வருகின்றனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இவரால் திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து சர்ச்சைகள் எழுந்து சின்னத்திரை உலகத்தையே கவனிக்க வைத்தது. ஆனால் இந்த சர்ச்சைகள் எதற்கும் இவர்கள் பதில் அளிக்கவில்லை. தங்கள் உலகில் தங்களுக்கான தனி வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது வெளியில் செல்லும் வீடியோக்கள் மற்றும் நண்பர்களுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அதன்பிறகு தான் ஷபானா மற்றும் ஆர்யனின் விவாகரத்து சர்ச்சைகள் முடிவிற்கு வந்தது.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் – வட்டி விகிதத்தை உயர்த்த ஆலோசனை கூட்டம்!
பிப்ரவரி 14ம் தேதி அன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பிப்ரவரி மாதத்தின் 2ம் வாரம் முழுவதும் காதலர்கள் தனி தனியாக டெட்டி டே,சாக்லேட் டே என்று கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் நேற்று ஹக் டே அன்று இரவு டின்னருக்காக ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் சேர்ந்து வெளியில் சென்று கொண்டாடியுள்ளனர். அதனை ஆர்யன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த ஜோடியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.