PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் – வட்டி விகிதத்தை உயர்த்த ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் மாத சம்பளக்காரர்களுக்கு அதீத பலன் அளிக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமான EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மார்ச் இரண்டாவது வாரத்தில், மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டம்:
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் பலன் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தும் என ஊழியர்களிடம் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. மேலும் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10 தேதி வெளியாக உள்ளது. எனவே மார்ச் இரண்டாவது வாரத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய டிரஸ்டீஸ் குழு கவுகாத்தி-யில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய இக்கூட்டம் நடக்க உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் முந்தைய ஆண்டை போலவே 8.5 % என்ற வட்டி விகிதத்தை EPF வைப்பு நிதிக்கு வாழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் EPFO அமைப்பின் நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு மொத்த வருமானம் மற்றும் லாப அளவீடுகளைக் கணக்கிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி டிக்கெட் எடுப்பது ஈஸி! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த நிலையில் மார்ச் இரண்டாவது வாரத்தில் கவுகாத்தியில் நடக்க உள்ள கூட்டத்தில் வட்டியை உயர்த்தினால் மாத சம்பளக்காரர்கள் கணக்கில் கடந்த நிதியாண்டு வரையில் வைப்பு வைக்கப்படும் நிதிக்கு கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி வருமானத்தை EPFO தனது முதலீட்டின் வாயிலாகக் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை EPFO கணக்காளர்களுக்கு அளிக்கிறது. சமீபத்தில் EPFO தனது முதலீட்டு அளவுகளையும், முதலீடுகளைப் பிரிவுகளையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.