தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் தற்போது மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் துல்லியமாக தகவல் தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் 17ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது விரிவாக பார்க்கலாம்
மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
13.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
Post Office சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!
14.02.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
15.02.2022 முதல் 17.02.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்ததிற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
13.02.2022 : தென் தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு, தென் கேரள கடலோர பகுது மற்றும் லட்சதீவு பகுதியில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.