தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை - பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை - பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – பிப்.22 கடைசி நாள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழகத்தில் காரைக்குடி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காப்பீடு முகவர் வேலை

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அதிகளவு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து காரைக்குடி அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணியில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!

இப்பணிக்கு வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிா் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு 18 வயது முதல் 50 வயது நிரம்பியவர் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியமிக்கப்படுவோருக்கு அவர்கள் செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படுகிறது. இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ரூ.5000 தொகையை செலுத்த வேண்டும்.

பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

இந்த தொகை பணியாளரின் உரிமம் முடிவடையும் நிலையில் அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து இதனை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு பிப்ரவரி 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04565 – 224548 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!