புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!

0
புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!
புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!
புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டையை பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து 15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய வழிமுறைகள்:

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக இருக்கிறது ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர்.மேலும் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் தற்போது ரேஷன் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வகை ரேஷன் கார்டுகள் குடும்பத்தின் வருவாயை பொறுத்து 5 வகைகளில் உள்ளது. இந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு விண்ணப்பத்தை செலுத்திய பிறகு ஆவணங்கள் சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் – பட்டியல் வெளியீடு!

இருப்பினும் தற்போது எந்த ஒரு அலைச்சலும் இல்லாமல் 15 – 20 நாட்களில் ரேஷன் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் ஒரு சலுகையை ஆன்லைன் வழங்குகிறது. பழைய ரேஷன் கார்டுகளில் இருந்து, புதிய ரேஷன் அட்டைகளை பெற விரும்புவர்கள் முதலில் பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். இதற்காக பயனரின் திருமண பதிவு சான்று கட்டாயமாகும். மேலும் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று கட்டாயம் ஆகும். புதிய ரேஷன் அட்டையில் குடும்ப தலைவராக சேர்க்க உள்ளவரின் புகைப்படத்தை 5 MB அளவில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து வாடகை ஒப்பந்த பத்திரம், வீட்டு வரி, வாடகை ரசீது, கேஸ் இணைப்பு தகவல்கள் தேவைப்படும்.

1.முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை திறக்கவும்.

2.அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதை திறந்து, மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3.அதன் அடுத்த பக்கத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும்.

4.அதன் பிறகு Name of family head என்ற பெட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயரை பதிவிடவும்.
பிறகு முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் எண், இமெயில் ஐடி விவரங்களை கொடுக்கவும், தொடர்ந்து புகைப்படத்தை பதிவிடவும்.

5.பிறகு தேவையான அட்டையை கிளிக் செய்து தேர்வு செய்யலாம்.

6.இருப்பிட சான்றிதழில் கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் 1 MB அளவில் ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்யலாம்.

7.அடுத்து உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.அதில் குடும்ப தலைவர் பெயரை பதிவு செய்தவுடன், நீங்கள் கொடுத்த மற்ற விவரங்கள் தோன்றும்.

8.அடுத்து ஸ்கேன் கொடுத்து ஆதார் தகவல்களை அப்லோட் செய்யவும்.பிறகு உறுப்பினர் சேர்க்கை SAVE என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.தொடர்ந்து சமையல் எரிவாயு இணைப்பில் பெயர், விவரங்கள், சிலிண்டர் போன்றவற்றை பதிவிடவும்.பிறகு நீங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து உறுதி செய்யவும்.

9.இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி ரேஷன் அட்டையின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!