பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
அஞ்சல சேமிப்பு திட்டங்களில் ஒன்று செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்
செல்வமகள் சேமிப்பு:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் சேமிப்பு திட்டங்களில் சேருபவர்களுக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் மக்கள் இதில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புற மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள் உங்களின் எதிர்கால சேமிப்புக்கு உத்திரவாதத்தை அளிக்கிறது.
புதிய ரேஷன் கார்டு 15 நாளில் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் இதுதான்? எளிய வழிமுறைகள்!
ஒவ்வொரு திட்டங்களும் தனித்தனி விதிமுறைகளையும் கால அளவும் கொண்டுள்ளது. மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகள் உதவும் வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம். செல்வ மகள் சேமிப்பில் 7.6% வட்டி வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக மாவட்டத்தில் பிப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்ச தொகை கூட முதலீடு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இக்கணக்கை தொடங்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகையை முதிர்வு காலத்தில் 50% தொகையை குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். அல்லது திருமணம் ஆகும் போதோ அல்லது 21 வயது நிறைவு பெறும் போதோ பெறலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வரி சலுகைகளும் உண்டு.முதலீட்டுத் தொகை, வட்டி வருமானம், மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.