1 முதல் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் ஆகியோர்களின் கோரிக்கை முன் வைத்தனர். இந்த கோரிக்கை அடிப்படையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு அறிவிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக அதிக தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்பு தொற்று பரவல் குறைந்தால் மீண்டும் பள்ளி ,கல்லூரிகள் கடந்த செப்டம்பர் முதல் திறக்கப்பட்டது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இந்த வகையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கின. இந்நிலையில் நடப்பு ஆண்டு, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவுத்துறை அதிரடி!
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அடிப்படையில் மஹாராஷ்டிராவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறினார். இது தொடர்பான பரிந்துரைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வகையில் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர்கள் விருப்பம் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அங்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
Please seekirama tamil nadu layu school reopen pannunga 😭😭😭