தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவுத்துறை அதிரடி!
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் நியாயவிலை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மக்கள் தரப்பில் புகார் எழுந்து வருகிறது.
ரேஷன் கடைகளில் ஆய்வு:
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாதாந்திர பயணச்சீட்டுகள் பெறும் பேருந்து பயணிகள் கவனத்திற்கு – இன்று கடைசி நாள்!
அவ்வாறு வழங்குவதற்கு ஏற்ற வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நியாயவிலை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய உணவுப்பொருள் வழங்குதலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழக அரசுக்கு தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய புகார்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக உணவுத்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உணவுத்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மினிமம் பேலன்ஸ் கட்டணம் திடீர் உயர்வு!
அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வில் ரேஷன் கடைகளின் தகவல் பலகையில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர் பெயர், பொருட்கள் இருப்பு, விடுமுறை நாள், பணி நேரம் உள்ளிட்ட விபரங்களை அந்த பதிவேடுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு செல்வதற்கு முன்பு அந்த ரேஷன் கடைக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களை விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய நடவடிக்கை மூலம் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.