சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. மாதத்தின் கடைசி வாரத்தில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மீதான அதிக முதலீடு விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. தங்கம் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளிக்கிறது. ஆனால் நகை வாங்க நினைப்பவர்களுக்கு தங்கம் விலை அதிகரிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க நினைப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர்.
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!
இந்தியாவை பொறுத்தவரை தென் மாநிலங்களில் அதிக அளவில் தங்கம் விற்பனை ஆகும். அதிலும் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. விழாக்காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் தங்கம் விலை வழக்கத்தை விட சற்று அதிகரித்து இருக்கும். அந்த வகையில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தங்கம் விலை சற்று அதிகரித்து. இவை முடிந்த பிறகு ஓரளவு தங்கம் விலை இறங்கியது. இந்த நேரத்தினை பயன்படுத்தி நகைப்பிரியர்கள் நகை வாங்க முயற்சித்தனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவுத்துறை அதிரடி!
இந்த நிலையில் மாதத்தின் கடைசி வாரமான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,664 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,583 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி வெள்ளி ரூ.68.80 க்கு விற்கப்படுகிறது.