மதுரை அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாணவர்கள் போராட்டம் எதிரொலி!
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தேர்வுகள் 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக மே மாதம் மாநிலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள், அலுவலகங்களை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலும் மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
CBSE 10, 12ம் வகுப்பு முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு – மாணவர்களின் கவனத்திற்கு!
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்லூரி வளாகத்தின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகளை தொடங்கி பள்ளி, கல்லூரிகளை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
நவ.17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாநில முதல்வர் உத்தரவு!
அதனை தொடர்ந்து கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேரடி செமஸ்டர் தேர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி விட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.