இனி தேவையில்லாமல் வாய்தா கேட்பவர்களுக்கு அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
திருவள்ளூர் முன்சீப் நீதிமன்றத்தில் 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வாய்தா:
திருவள்ளூர் முன்சீப் நீதிமன்றத்தில் 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ஒரு வழக்கை தேவையில்லாமல் சாதாரண காரணத்துக்காக ‘வாய்தா’ கேட்டால் அந்த வழக்கின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னிலை – மத்திய அமைச்சர் தகவல்!!
அதனால் வாய்தா கேட்கும் நபர்கள் முறையான காரணம் கூறினால் மட்டுமே வாய்தா வழங்கப்பட வேண்டும். மேலும், ஒரு வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் மனுதாரர்கள் பெரிதும் மன வேதனைக்கு உள்ளாகிறார்கள். ஆதலால் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் எனப்தற்காக சாதாரண காரணத்தைக் கூறி அடிக்கடி வாய்தா கேட்டால், பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த அபராத தொகையை வழக்கை நடத்த தயாராக இருக்கும் எதிர் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, சட்ட விரோதமாக ஒரு நோக்கத்தை அடைய வாய்தாவாக கேட்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.