பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னிலை – மத்திய அமைச்சர் தகவல்!!
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இதில், இந்திய அளவில் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என தகவல் தெரிவித்துள்ளார்.
பெண் கல்வி
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இவர் இதில் பேசியதாவது, சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Follow our Twitter Page for More Latest News Updates
தற்போது அனைத்து மாநில அரசுகளும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
டாப் 4 டெக் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்…இது தான் காரணம்!! CEO விளக்கங்கள்!!
இதையடுத்து, பெண் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் அதிக அளவில் தமிழகத்தில் இருக்கும் பெண்கள் தான் அதிகம் வேலைக்கு செல்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு அரசு பணிகளில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.