தமிழகத்தில் காத்திருக்கும் 1000+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.71,900/- || விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதி மன்றங்களிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மெட்ராஸ் உயர் நீதிமன்றம், நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Examiner, Reader, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 1412 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Madras High Court |
பணியின் பெயர் | Examiner, Reader, Driver and Others |
பணியிடங்கள் | 1412 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் அரியலூர், மதுரை, கோயம்புத்தூர் போன்ற தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள Examiner பணிக்கு 118 பணியிடங்களும், Reader பணிக்கு 39 பணியிடங்களும், Senior Bailiff பணிக்கு 302 பணியிடங்களும், Junior Bailiff பணிக்கு 574 பணியிடங்களும், Process Server பணிக்கு 41 பணியிடங்களும், Process Writer பணிக்கு 03 பணியிடங்களும், Xerox Operator பணிக்கு 267 பணியிடங்களும், Lift Operator பணிக்கு 09 பணியிடங்களும், Driver பணிக்கு 59 [பணியிடங்களும் என மொத்தமாக 1412 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
இந்த நீதிமன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் Xerox Operator பணிக்கு Xerox machine Operator ஆக 6 மாத காலம் பணிபுரிந்த நபர்களுக்கும், Driver பணிக்கு Driving License வைத்திருக்கும் நபர்களுக்கும் முன்னுரிமை தரப்படும். 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.16,600/- முதல் ரூ.71,900/- வரை இந்த நீதிமன்ற பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தங்களது விண்ணப்பத்தை தவறாது பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நீதிமன்ற பணிகளுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக https://jrchcm2022.onlineregistrationform.org என்ற அதிகாராப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் (22.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்