மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
கோவிட் – 19 என்ற பெருந்தொற்று உலகம் முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடம் ஆனா சீனாவில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்:
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களாக அதிக பாதிப்பை கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தியது. இந்த வகையில் கொரோனா சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் உருவானது. மேலும் தொற்று பாதிப்பு இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இன்று வரை அதிக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது.
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.58,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!
இந்நிலையில் சீனா மட்டும் இன்னும் ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் தீவிரமாக உள்ளது. தற்போது அங்குக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் தொடங்கி உள்ள நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகரில் சுமார் 35 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் கடந்த வாரம் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் மட்டும் 70 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , தற்போது இந்த நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்து , நகரத் துணை மேயர் குஜுன்யன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.