மாநிலத்தில் முழுவதுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

0
மாநிலத்தில் முழுவதுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!
மாநிலத்தில் முழுவதுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!
மாநிலத்தில் முழுவதுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தியுள்ளது.

கட்டுப்பாடுகளில் தளர்வுகள்

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவியதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது உணர முடிந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது.

தமிழகம் முழுவதும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு!

அதன்படி பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் கொரோனா பரவலின் 3ம் அலை குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அத்துடன் இன்று முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது.

Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் – தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!

மேலும் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், கேளிகைகள் உள்ளிட்ட இடங்களில் 100% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் பயணம் செய்பவர்கள், கல்வி கற்பவர்கள் ஆகியோர் 7 நாட்கள் தனிமையில் கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் RT-PCR சோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனையின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற முடிவை பெற்றவுடன் அவர்கள் தனிமைப்படுத்தி கொள்வதை நிறுத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக கட்டுப்பாடுகளை ராஜஸ்தான் அரசு தளர்த்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!