தமிழகம் முழுவதும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.
தளர்வுகள்:
தமிழகத்தில் கடந்த 2021 மே மாதம் தீவிரமெடுத்த கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தொற்று பாதிப்புகளை அடிப்படையாக வைத்து அவ்வப்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் எனும் வைரஸ் தொற்று வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மீண்டும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது.
2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வர் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மருத்துவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்:
- நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்க அனுமதி
- உணவகங்கள், திரையரங்கள், விடுதிகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி, சலூன்கள், அழகு நிலையங்கள் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் முழுமையாக செயல்படலாம்.
- உள் விளையாட்டு அரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு பார்வையாளர்களுடன், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்