தமிழகத்தில் அக்.24ம் தேதி மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் 24 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக்:
தமிழகத்தில் பெருந்தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அன்றைய தினம் மது கூடங்களில் மது விற்பனையானது முற்றிலும் தடை செய்யப்படும். அந்த வகையில் நடப்பு மாதமான அக்டோபரில் 2 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது அக்டோபர் 2ம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும் மது விற்பனை தடை செய்யப்பட்டது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
WhatsApp செயலியின் புதிய அம்சம் அறிமுகம் – பயன்படுத்தும் எளிய வழிகள்!
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் 3 – வது முறையாக சிவகங்கை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மதுபிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.