தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வாழ்நாள் சான்றிதழ் குறித்த அரசாணை!
தமிழகத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த சான்றிதழை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் அல்லது இ-சேவை மையம் மூலம் பெறலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்று:
தமிழகத்தில் அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியற்ற நபர்கள் பயன்பெற்று வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் உள்ளிட்டவைகளை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்தால் தான் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகள், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள், தமிழ்நாடு இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழை பெற ஓய்வூதிய எண், ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து வாங்க வேண்டியிருந்தது. அதனால் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் அல்லது இ-சேவை மையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.