தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ‘இந்த’ மாவட்டத்தில் மட்டும்!
தமிழகத்தில் மார்ச் 1 தேத மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவ பெருமானை வழிபடு உள்ளனர். இந்த நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
அரசு விடுமுறை:
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறையில் இரவில் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாளில் விரதம் பிடிப்போர் முதல் ஒரு நாள் ஒரு பொழுது உணவருந்தி, சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வது தான் வழக்கம் ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், தியாகிகள் தினங்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? – முக்கிய ஆலோசனை கூட்டம்!
இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த வகையில் மார்ச் 1ம் தேதி விடப்படும் விடுமுறைக்கு பதிலாக இரண்டாவது சனிக்கிழமையான 12ம் தேதி பணிநாளாக இருக்கும். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.