தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதையடுத்து தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் பல்வேறு துறைகளில் அதிரடியான சில மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்? – முக்கிய ஆலோசனை கூட்டம்!
அத்துடன் செம்மொழியான தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தமிழ் மொழியில் இனிசியலை எழுத வேண்டும் என்ற அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி கல்விக் குழு உத்தரவு பிறப்பிப்பு!
மேலும் இது குறித்த அரசாணையை அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது. தற்போது அதனை மீண்டும் வலியுறுத்தும் வகையில் முதலாவதாக பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த உள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களது பெயர் சேர்ப்பில் இனிசியலை தமிழ் மொழில் எழுத வேண்டும். இந்த நடைமுறையை தமிழகத்தில் அனைத்து தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களிலும் கட்டாயமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.