கண்ணம்மா காலில் விழும் சௌந்தர்யா – பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள்!
மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்து வர இருக்கும் முக்கிய திருப்பங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
முக்கிய திருப்பங்கள்:
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலின் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக கதையின் போக்கு உள்ளது. ஹேமா தான் தனது இன்னொரு குழந்தை என்பதை அறிந்து கொண்ட கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்றும் சீன்கள் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சீரியலில் அடுத்து வர இருக்கும் திருப்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இணைந்த நடிகர் ரியோ – விறுவிறுப்பாகும் அடுத்த கட்ட கதைக்களம்!
ஹேமாவை இரண்டு நாட்கள் கண்ணம்மாவிடம் அனுப்பி வைத்தால் கண்ணம்மா சமாதானம் ஆவார் என்று எதிர்பார்த்த சௌந்தர்யா, எனக்கு தோன்றும் வரை ஹேமா என் கூட தான் இருப்பாள் என்று கண்ணம்மா கூறும் பதிலால் அதிர்ச்சி ஆகிறார். ஹேமா எங்க இருக்கான்னு தெரியாமல் இருக்கும் பாரதி ஹேமாவிற்கு வீடியோ கால் செய்யும் போது கண்ணம்மா வீட்டில் ஹேமா இருப்பதை பார்க்கிறார். இதனால் பாரதி ஏதவாது விபரீத முடிவு எடுத்து விடுவானோ என்று பயந்து சௌந்தர்யா கண்ணம்மா காலில் விழுந்து ஹேமாவை அழைத்து வர சம்மதம் பெறுகிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ – போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு!
இன்னொரு புறம் தான் பொய் சொல்வது கண்ணம்மாவிற்கு தெரிந்து தான் இப்படி மிரட்டுகிறாள் என்று வெண்பா பயத்தில் இருக்கும் போது, பாரதி வெண்பாவிடம் வந்து ஹேமா இப்போ கண்ணம்மா வீட்டில் தான் இருக்கிறாள் என்றும், ஹேமா தன்னோட குழந்தை தான் என்று கண்ணம்மா சொல்வதாகவும் கூறுகிறார். இந்த காரணத்தினால் தான் தன்னை கண்ணம்மா மிரட்டுகிறாள் என்பதை வெண்பா உறுதி செய்கிறாள். இது போன்ற நிலையில் சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும் ஒரு புறம் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.