விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ – போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 19வது நாளான இன்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டு நாமினேஷனில் உள்ள மற்ற போட்டியாளரை காப்பாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 2 வாரங்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது வாரம் கடுமையான போட்டிகளுடன் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் பலர் நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள திட்டமிட்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் போட்டியாளர்களுக்கு நாணயம் வழங்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.
Strategy Game விளையாடும் பிரியங்கா, நிரூப் & அபிஷேக் – வெளியான ‘பிக் பாஸ் 5’ ப்ரோமோ!!
அந்த நாணயத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்தவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என சொல்லப்பட்டது. பின் போட்டியாளர்களின் இசை, நிரூப், பாவனி, தாமரை, வருண் ஆகியோரிடம் அந்த நாணயம் இருந்தது. அதன் பின் மூன்றாவது சுற்று தொடங்கப்பட்டது. தற்போது வெளியான ப்ரோமோவில் நாணயம் வைத்திருக்கும் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் காப்பாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவி ‘மெட்டி ஒலி’ உமாவின் மரணத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் – மனம் திறந்த நடிகை!
மேலும் தலைவர் பதவியில் இருப்பவரது பதவியை வாங்கி அவர் மற்றொருவருக்கு கொடுக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் எனக்கு கொடுக்க வேண்டும் என நாணயம் வைத்திருப்பவர்களிடம் பேசி வருகின்றனர். அதேபோல பாவனி தன்னை காப்பாற்ற வேண்டும் என அபிஷேக் பேசி வருகிறார். அபிஷேக் அப்படி செய்வது ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.
Yes 💯 crakt