சன் டிவி ‘மெட்டி ஒலி’ உமாவின் மரணத்திற்கு பின்னால் உள்ள காரணங்கள் – மனம் திறந்த நடிகை!
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ‘மெட்டிஒலி’ சீரியல் நடிகை உமா மகேஷ்வரி மரணமடைந்த நிலையில் அவரது இறப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகையின் மரணம் தொடர்பான உண்மை காரணம் குறித்து நடிகை ரேவதி ப்ரியா மனம் திறந்துள்ளார்.
நடிகை மரணம்
கடந்த 2 வருடங்களில் எதிர்பாராத பல மரணங்களை தமிழ் திரையுலகம் சந்தித்துள்ளது. குறிப்பாக கொரோனா பேரலை பலரது உயிரை மாய்த்திருந்த நிலையில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த மண்ணை விட்டு மறைந்துள்ளனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை உமா மகேஷ்வரி சமீபத்தில் மரணத்தை தழுவியுள்ளார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார்? யார்? வெளியான லிஸ்ட்!
இவரது இறப்பு செய்தியை இன்று வரை ஒருவராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வெறும் 40 வயதே ஆன நடிகை உமா மகேஷ்வரியின் திடீர் மறைவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உமாவிற்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் அவரது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வனிதா விஜயகுமார் மற்றும் பவர் ஸ்டார் இணைந்து வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
இந்நிலையில் நடிகை உமாவின் மரணம் குறித்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘மெட்டிஒலி’ சீரியல் நடிகை ரேவதி ப்ரியா கூறுகையில், ‘நடிகை உமா மகேஷ்வரியின் மரணம் குறித்து எந்த விஷயமும் சரியாக தெரியாமல் வதந்திகளை பரப்புகிறார்கள். உமா மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை. இது தான் அவரது மரணத்திற்கு காரணம்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.