தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மே மாதம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அரசாணை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் மாநிலத்தில் கொரோனா தொற்று குறித்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் அதற்கான தேதிகளையும் அறிவித்தது. அதனை தொடர்ந்து மாணவர்களும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்கக உயரதிகாரிகள் தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களிலும் பொதுத்தேர்வை கண்காணிக்க தனித்தனி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்ட ரீதியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் (தூத்துக்குடி), பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.மணிகண்டன் (கோயம்புத்தூர்) தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா (சென்னை), தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி (செங்கல்பட்டு), எஸ்எம்சி கூடுதல் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (காஞ்சிபுரம்), பாடநூல் கழக செயலாளர் ச.கண்ணப்பன் (திருச்சி), பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நரேஷ்(கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்) போன்றோர் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டு உள்ளனர்.