PM கிசான் யோஜனா திட்டத்திற்கு இனி ரேஷன் கார்டுகள் கட்டாயம் – முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதுமுள்ள தகுதியுடைய விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவித்தொகையை பெறுவதற்கு இனி ஆதார் அட்டைகளுடன் ரேஷன் கார்டுகளும் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு
இந்தியாவில் விவசாய பணியை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டு தோறும் சுமார் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை தகுதியுடைய விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 3 தவணையாக பிரித்து அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது மத்திய அரசின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக்கொள்ள ஆதார் அட்டைகளுடன் ரேஷன் கார்டுகளும் இனி கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – முழு விவரங்கள் இதோ!
அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் ஏற்படும் சில முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த ரேஷன் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உதவித்தொகையை பெறுவதற்கு முன்பு, பயனர்கள் PM கிசான் இணையதளத்தில் தங்களது ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும் நபர்கள் தங்களது ரேஷன் கார்டு எண் உட்பட மற்ற ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விவசாயிகள் இனி ரேஷன் கார்டு தவிர, நில ஆவணம், ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் டிக்ளரேஷன் ஆகியவற்றின் நகலை சமர்ப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது PM கிசான் சம்மன் நிதியின் 10வது தவணை பணம் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதியில் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3% DA உயர்வால் சம்பள அதிகரிப்பு! முழு விவரம் இதோ!
இதற்கிடையில் இத்திட்டத்தில் புதிதாக இணைய விரும்புபவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ரூ.2,000 தவணைப் பணம் கிடைக்க உள்ளது. மேலும் PM கிஷான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதே போல இதற்காக ரூ.1.60 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.