தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் நவ 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.ஜி., வகுப்புகள் மட்டும் திறக்கப்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் விகிதம் குறைந்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதனை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள், சுற்றுலா தலங்கள் முதலியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3% DA உயர்வால் சம்பள அதிகரிப்பு! முழு விவரம் இதோ!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு, 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடக்கும். அதே நேரம், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், நர்சரி வகுப்புகளான ப்ரீ.கே.ஜி., – எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., தவிர, ஒன்றாம் வகுப்பில் இருந்து மற்ற வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். ‘பிளே ஸ்கூல்’களாக செயல்படும் மழலையர் பள்ளிகளை திறக்கவும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Super
This is nice
Jolly pa
8th ku la ya sch open pandriga😯😕😕
To raise money for private school, the school was started
I ma very happy 😊
8 th ku school open pannitinga la😓😰