‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாரதி கண்ணம்மா வரை’ – அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகும் நடிகர், நடிகைகள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்கான காரணம் குறித்து தற்போது இந்த பதிவில் காணலாம்.
விஜய் டிவி சீரியல்கள்
ரசிகர்கள் இன்று பலரும் சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. ஆனால், தற்போது முக்கிய சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ச்சியாக சீரியலை விட்டு விலகி வருகின்றனர். முன்னணி சீரியலான பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடித்து வரும் பரினா கர்ப்பமாக இருப்பதால் சீரியலை விட்டு விலகி விடுவார் என்று கூறப்பட்டது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர், முல்லைக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால், குழந்தை பிறந்து சிறிது நாட்களுக்கு பிறகு தானே மீண்டும் அதே வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்பதனை நடிகை பரினா உறுதியாக தெரிவித்து விட்டார். அதே போல இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாற்றப்பட்டார். இப்படியான சூழலில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து இருப்பதால் தான் இவ்வாறாக சீரியலை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகர் ரியோ ராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சீரியலை விட்டு விலகி விடுவார் என்றும் அவருக்கு பதிலாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை தர்ஷா குப்தா நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா தர்ஷனுக்கு பதிலாக இனி அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்வாமிநாதன் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்த காரணத்தினால் தான் சீரியலில் நடிக்க இயலவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.