SBI வங்கியின் முக்கிய அறிவிப்பு – இந்த நாட்களில் பணப்பரிவர்த்தனை செய்வது கடினம்!
இந்தியாவில் இயங்கி வரும் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையாக இதில் பார்க்கலாம்.
வேலை நிறுத்தம்
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் கூட பொதுமக்களுக்கு சிறப்பான வங்கி தொடர்பான சேவைகளை அனைத்து வங்கிகளும் வழங்கி வந்தது. தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் வங்கி சேவைகளை பெற முடிகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தன் வசம் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வட்டி தொகையானது கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷன் கார்டு ரத்து? அமைச்சர் விளக்கம்!
தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார்மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்டவை பங்கு பெற உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற மார்ச் 26,27ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதும் தாமதம் ஆகலாம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி தொடர்பான சேவைகளை வழங்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.