TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாத போட்டி தேர்வுகள் அனைத்தும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. குரூப்- 2,4 தேர்வுக்கான அறிவிக்கை சமீபத்தில் வெளியான நிலையில் தேர்வர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் உதவி இன்ஜினியர் பணிக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்ய இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது.
TNPSC தேர்வு தேதி மாற்றம்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வருடம் வெளியான வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!
தற்போது TNPSC குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறமால் இருப்பதால் லட்சக்கணக்கில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு துறைகளில், உதவி இன்ஜினியர் பணிக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழக நெடுஞ்சாலை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நீர் மேலாண்மை, சி.எம்.டி.ஏ., போன்ற துறைகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த துறைகளில் காலியாக உள்ள 626 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 3 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள், ஜூன் 26 ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தேதியில் மாற்றம் இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. அதன் படி ஜூலை 2 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.