சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!

0
சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு - இறுதி வாய்ப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு - இறுதி வாய்ப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியர் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 2015ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

இந்த அறிவிப்பில், கடந்த 2015-2016-ஆம் கல்வியாண்டு முதல் சோ்ந்த மாணவா்களுக்கு நிகழாண்டு ஏப்ரல், நவம்பா் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளில் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் இதுவே இவர்களுக்கு கடைசி வாய்ப்பாகும். மேலும் 2015-2016 முதல் 2018-2019-ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் சோ்ந்த முதுகலை பட்டப்படிப்பில் அரியர் வைத்த மாணவர்களுக்கு ஏப்ரல் மாத பருவத் தோ்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இதுவே இவர்களுக்கு இறுதி வாய்ப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!