TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – மிஸ் பண்ணாம படிங்க!
TNPSC நடத்தும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான தேர்வின் முதல் தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு அரசுத்துறை காலிப்பணியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்பும் பொருட்டு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் TNPSC தேர்வுகளுக்கான ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் எழுத கூடிய குரூப் 2 மற்றும் 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. தற்போது குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் போராட்டம்!
இன்னும் தேர்வுக்கு விண்ணப்பிக்க 7 நாட்களே உள்ளது. ஏப்ரல் 28ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் TNPSC தேர்வுகளில் இந்தாண்டு முதல் பல மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் அனைத்து TNPSC தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் நோக்கிலும் இத்தகைய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் TNPSC யின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் வந்ததை அடுத்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான தேர்வின் முதல் தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானது ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தாளின் சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் விருப்ப பாடங்களின் வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.