தமிழக அரசில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் போராட்டம்!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு ஊழியா் சங்கத்தினா் தமிழக அரசுக்கு முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
முக்கிய கோரிக்கைகள்:
தமிழகத்தில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சங்கத்தினர் (புதன்கிழமை) நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவா் சங்கர் தலைமை வகித்தாா். மேலும் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அண்ணாதுரை, அரசு ஊழியா்கள் சங்கத்தின் வட்டக் கிளை துணைத் தலைவா் லட்சுமண பெருமாள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பேசினா். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய, அரசு ஊழியர்கள் சங்கத்தின் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பக் கோரி கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ExamsDaily Mobile App Download
இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாக அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் நிதி சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்த திட்டம் மூலம் மாதம் மாதம் ஓய்வூதியம் வழங்காமல் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்க வேண்டும். மேலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். கொரோனா காலகட்டத்தில், இறந்த அரசு ஊழியா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.