தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் – கல்வித்துறை அறிவிப்பு! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2020ம் ஆண்டும் 12ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டது. மேலும் மீண்டும் கொரோனாவின் 3ம் அலை காரணமாக ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.1000 உதவித்தொகை!
இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனால் நேரடி வகுப்புகள் குறைவான அளவே கடந்த நடைபெற்றது. இந்த நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அத்துடன் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அத்துடன் அறிவித்தப்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல், குறைவான நாட்கள் நேரடி வகுப்பு, பாடத்திட்டம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 9ம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாயமாக தேர்ச்சி வழங்கப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.