தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.1000 உதவித்தொகை!
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயில கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அவர்களின் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது வரும் கல்வியாண்டில் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் பயனாளிகளை இறுதி செய்வதற்காக, மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.760 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவிகள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.