அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஜூன் 30 வரை இறுதி காலஅவகாசம்!
நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்களது ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டையை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார்- ரேஷன் இணைப்பு:
மத்திய அரசு நாட்டின் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக தான் வழங்குகிறது. இதனால் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். மேலும், இனி வரும் காலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை முழுவதுமாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட திட்டம் தான் ‘‘ஒரே நாடு ஒரே கார்டு’. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய உத்தரவு!
இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு முன்னதாக நாட்டின் அனைத்து ஆவணங்களையும் ஆதாருடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதுபோல், ரேஷன் கார்டையும் ஆதரவுடன் இணைக்க கடந்த சில வருடங்களாக அறிவுறுத்தி வருகிறது. முன்னதாக மார்ச் 31ம் தேதி இதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
தற்போது மக்களின் கோரிக்கையை அடுத்து ரேஷன் மற்றும் ஆதாரை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலில் uidai.gov.in ன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அதில் ‘Start Now’ என்பதைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும், இந்த செயல்முறைக்கு ஒரிஜினல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் போன்ற ஆவணங்கள் தேவை. இவற்றின் மூலம் நாம் எளிதாக ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம்.