தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் அரசின் முழு பார்வையும் அரசு பள்ளிகள் மீது தான் இருக்கிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளுக்கு அறிவிப்பு:
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் பல பள்ளிகளில் முழு கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனால் மக்கள் பலர் அரசு பள்ளிகளை நோக்கி வர தொடங்கினார்கள். அதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. எனவே அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த வேண்டும் என அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
தனியார் பள்ளிகளின் வகுப்பறை கட்டமைப்புகள் போல அரசு பள்ளிகளில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல சலுகைகளை கொடுத்து மேலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயில ஊக்குவித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அப்போது பேசிய அவர் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வாயிலாக 20 படுக்கைகளுக்கு நேரடியாக ஒரே நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்க முடியும். இங்கு மருத்துவத்துறை சார்பில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின் பேசிய அவர் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது, பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.