பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்க லட்சுமி, ஹேமா எடுக்கும் முடிவு – “பாரதி கண்ணம்மா” ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு விசாரனைக்கு வர இருப்பதால் அப்பா அம்மா பிரிந்துவிட போகிறார்கள் என லட்சுமி வருத்தப்படுகிறார். லக்ஷ்மியின் நிலைமையை நினைத்து கண்ணம்மா வருத்தப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா:
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அப்பா இல்லாமல் லட்சுமி தவித்து கொண்டு இருப்பதையே அடிக்கடி கதையில் காட்டப்பட்டு வருகிறது. லட்சுமிக்காக கண்ணம்மாவும் பாரதியும் சேர வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் லட்சுமி அப்பாவை நினைத்து எவ்வளவு ஆசைப்படுகிறார் என்பது எல்லாம் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. மேலும் கண்ணம்மா, லட்சுமி அப்பா பாசத்திற்காக எவ்வளவு ஏங்கி கொண்டிருக்கிறார் என நினைத்து வருத்தப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். இன்று வக்கீல் வர அவரிடம் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என சொல்ல ஹேமா அதை கேட்டுவிடுகிறார். ஒன்றாக இருக்கும் கணவர் மனைவி பிரியத் தான விவாகரத்து வாங்குவார்கள். அப்பா தான் என்னுடைய அம்மா பிறக்கும் போதே இறந்துவிட்டதாக சொன்னார். அப்போ யாருக்கு விவாகரத்து என தெரியாமல் குழப்பமாக இருக்கிறார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? சுகாதாரத்துறை செயலாளரின் முக்கிய உத்தரவு!
அதனால் ஹேமா தன்னுடைய அம்மா பற்றிய உண்மையை கண்டுபிடிக்க இருக்கிறார். லட்சுமி மறுபக்கம் அப்பா அம்மா பிரியக் கூடாது என நினைக்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் குழந்தைகளை வைத்து காட்சிகள் எடுக்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது. வெண்பாவை திருமணம் செய்ய இருப்பது யார் என்ற உண்மையும் தெரிந்துவிட்டதால் பாரதி கண்ணம்மா சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் போகும் என்பது உறுதியாக தெரிகிறது.