TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – லட்சக்கணக்கானோர் போட்டி!
குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ஒரு பதவிக்கு 296 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC போட்டித் தேர்வு
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படமால் இருந்தன. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
இந்நிலையில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இளநிலை உதவியாளர், பில் வசூலிப்பவர் சுருக்கெழுத்து தட்டச்சர் என 163 பணியிடங்களோடு சேர்த்து மொத்தம் 7301 பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும்,டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவியில் புதிய சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை எனவும் கடந்த 2017ம் ஆண்டு அதிகபட்சமாக 20.76 லட்சம் பேர் தான் விண்ணப்பித்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த சாதனை குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளுக்கு முந்தைய 4 நாட்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இறுதி நாளான்றும் நேற்று முன்தினம் விண்ணப்பிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டினார். இதனால் நேற்று முன்தினம் 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டதால் இரவிலும் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.