தமிழக அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கை – அதிகாரிகள் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கைகளுக்கு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து கேட்ட போது அதிகாரிகள் உரிய உத்தரவு அளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
மழலையர் வகுப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் 1 – 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்புகளை தொடர்ந்து அங்கன்வாடி நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளும் மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டது.
நாளை (ஏப்ரல் 4) முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் ஏழை எளிய மக்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினார். கடந்த ஆண்டுகளில் நிலவிய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க போதிய பணம் இல்லாததால் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். அதனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், உணவு என்று அனைத்தும் வழங்கி சிறந்த கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சேர்க்கைகளுக்கு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அலுவலர்கள் கூறும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் மேல் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சேர்க்கை செய்ய முடியாததால், மறுப்பு தெரிவிக்கிறோம் என்று கூறுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால் நடப்பு ஆண்டு மழலையர் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.