நவம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
கேரளா மாநிலத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்த முடிவுகளை மாநில அரசு இன்று நடைபெற்ற கோவிட் -19 ஆய்வு கூட்டத்தில் எடுத்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு குறைந்து வந்ததால் பள்ளிகள் திறக்க அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத கேரளா மாநிலம் பள்ளிகளை திறப்பது குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவுகளை அரசு எடுக்க உள்ளதாக அறிவித்தார். இதற்காக அரசு சுகாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தை இன்று நடத்தினார். அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் – களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்! நடிகர் விஜய் அனுமதி?
பள்ளி மீண்டும் திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த வாரம் முதல் குறைந்து வருகிறது. செப்டம்பர் 30 -க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸுடன் சுகாதாரத்துறை தடுப்பூசி போடப்படும் என்றும், இதுவரை 82 சதவீத வயது வந்தோர் மாநிலத்தில் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.