ஊரக உள்ளாட்சி தேர்தல் – களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்! நடிகர் விஜய் அனுமதி?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் :
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த வருடத்திற்குள் உழல்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து இந்த 9 மாவட்டங்களிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தொகுதி வாரியாக ஊராட்சி வாக்காளர் பட்டியல் தயார் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அக்.2 வரை 15 நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா தொற்று எதிரொலி!
மேலும் 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேமுதிக கட்சி தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தொண்டர்களும் மனுக்களை வரும் 16,17 ஆகிய தினங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
IPL 2021: CSK vs MI பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!
அதனை தொடர்ந்து தற்போது விஜய் மக்கள் இயக்கம் சுயேச்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில் 20 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.