அக்.2 வரை 15 நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா தொற்று எதிரொலி!
யூனியன் பிரதேசமான லேவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதால் அங்கு பள்ளிகளை மூட அந்த மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் பரவல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. கொரோனா 2ம் அலைக்கு பிறகு தற்போது தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிகளை திறக்க அனைத்து மாநில அரசுகளும் முடிவு எடுத்தது. அந்த வகையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் லே மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்றினால் பாதிப்படைந்து வந்தனர்.
தடுப்பூசி செலுத்தினால் ‘ஆண்ட்ராய்டு போன்’ இலவசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
லடாக்கில் 71 புதிதாக கொரோனா பதிவானதை அடுத்து, லே மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை அந்த மாநில மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டாலும், மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாணவர்கள் 7 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#BreakingNews முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் – கட்சியினர் அதிர்ச்சி!
ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவுடன், ஹாஸ்டல் அறைகளை முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் பதிவான 73 கொரோனா பதிப்புகளில் 71 பாதிப்புகள் லே மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.