தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கார்டு :
தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை கொண்டு வரப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை 2021 ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தியிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மாநிலங்கள் புலம்பெயர்ந்தோரைப் பதிவு செய்வதற்காக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் ரேஷன் அட்டைகளை பதிந்து வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் – களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்! நடிகர் விஜய் அனுமதி?
தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பொது விநியோக முறையின் கீழ் உணவு தானியங்களைப் பெறுவதைத் தொடர, ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் கூறியதாவது, பயனாளி தான் வசிக்கும் மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்தும் பயனாளி இந்திய அரசு நிர்ணயித்த படி, அரிசி ஒரு கிலோ ரூ. 3, கோதுமை ஒரு கிலோ ரூ. 2 க்கு விலை கொடுத்து பெற வேண்டும்.
அக்.2 வரை 15 நாட்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவு – கொரோனா தொற்று எதிரொலி!
மேலும் ஒரு பயனாளியின் குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த உரிம அளவைத் தாண்டாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும், வேறொரு மாநிலத்தில் மற்றொரு பகுதியும் உணவுப் பொருள்களை அந்தப் பயனாளி பெற இயலும். இந்த திட்டத்தில் அரிசி, கோதுமையைத் தவிர கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யும் இதர வெளிசந்தை பொருள்களையும் உரிய விலையில் பயனாளி பெற்றுக் கொள்ளலாம். என்றும் தெரிவுய்துள்ளார்.